2.35 லட்ச ரூபாய் மதிப்புள்ள வெங்காயத்தை திருடிய நான்கு பேர் கைது..!

2.35 லட்ச ரூபாய் மதிப்புள்ள வெங்காயத்தை திருடிய நான்கு பேர் கைது..!
2.35 லட்ச ரூபாய் மதிப்புள்ள வெங்காயத்தை திருடிய நான்கு பேர் கைது..!

புனேயில் 58 மூட்டை வெங்காயத்தை திருடிய நான்கு திருடர்கள் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

புனேயில் ஒரு விவசாயியிடமிருந்து ரூ .2.35 லட்சம் மதிப்புள்ள வெங்காயத்தை திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நான்கு பேர் கொண்ட குழு 58 வெங்காய மூட்டைகளை திருடியது தெரியவந்துள்ளது. ஒட்டூர் பகுதி போலிசார் "ரூபாய் 2.35 லட்சம் மதிப்புள்ள 49 வெங்காய மூட்டைகள் மீட்கப்பட்டுள்ளன, மீதமுள்ள மூட்டைகளை திருடர்கள் ஏற்கனவே விற்றுவிட்டனர்" என தெரிவித்தனர். அதிக மழை மற்றும் பதுக்கல் காரணமாக உற்பத்தி செய்யும் பகுதிகளில் விளைந்துள்ள காரீப் வெங்காயப் பயிர் சேதமடைந்ததை அடுத்து, வெங்காயத்தின் விலை கடந்த சில வாரங்களில் ஒரு கிலோ ரூ .75 க்கு மேல் அதிகரித்துள்ளது.

உள்நாட்டு விநியோகத்தை அதிகரிப்பதற்கும், உயரும் வெங்காய விலையிலிருந்து நுகர்வோருக்கு நிவாரணம் வழங்குவதற்கும் மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி இப்போது, சில்லறை விற்பனையாளர்கள் வெங்காயத்தை 2 டன் வரை மட்டுமே சேமிக்க முடியும், அதே நேரத்தில் மொத்த வர்த்தகர்கள் 25 டன் வரை வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com