கடன் தொல்லை காரணமாக நகைக்கடை அதிபர் ஒருவர், தனது மனைவி, 2 மகள்களுடன் சயனைடு தின்று தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் உடுப்பியில் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம் உடுப்பி தாலுகா படுபெலே பகுதியை சேர்ந்தவர் சங்கர் ஆச்சார்யா (50). இவரது மனைவி நிர்மலா). இவர்களுக்கு சுருதி (23), ஸ்ரேயா(22) என்ற 2 மகள்கள். நகைக்கடை வைத்திருந்த சங்கர், பலரிடம் லட்சக்கணக்கில் கடன் வாங்கியதாகத் தெரிகிறது. வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை. இதனால் மனம் உடைந்த சங்கர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதையடுத்து சங்கர், நிர்மலா, சுருதி, ஸ்ரேயா ஆகிய 4 பேரும் சயனைடு தின்று பரிதாபமாக இறந்தனர். இதனை தொடர்ந்து 4 பேரின் உடல்களையும் மீட்டு போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை செய்துகொண்ட ஸ்ருதி எம்.பி.ஏ முடித்துள்ளார். அவருக்கு செப்டம்பர் மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. ஸ்ரேயா பிசிஏ முடித்துவிட்டு சமீபத்தில்தான் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்திருந்தார்.
கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.