காஷ்மீரில் பாக்., தேசியகீதம்: 4 கிரிக்கெட் வீரர்கள் கைது

காஷ்மீரில் பாக்., தேசியகீதம்: 4 கிரிக்கெட் வீரர்கள் கைது
காஷ்மீரில் பாக்., தேசியகீதம்: 4 கிரிக்கெட் வீரர்கள் கைது

ஜம்மு காஷ்மீரில் கிரிக்கெட் போட்டி தொடங்குவதற்கு முன், பாகிஸ்தான் தேசிய கீதத்தை இசைத்ததாக கிரிக்கெட் வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பண்டிபோரா மாவட்டத்தில் உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளது. போட்டி தொடங்குவதற்கு முன்,வீரர்கள் வரிசையாக அணிவகுத்து நிற்க பாகிஸ்தான் தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளது. இந்த காட்சிகள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ வைரலானதை அடுத்து அதில் இடம்பெற்று இருந்த 4 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். பெற்றோர்கள் அளித்த உத்தரவாதத்தையடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் , உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் பாகிஸ்தான் தேசிய கீதம் இசைக்கப்பட்டதாகவும் இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். போட்டி அமைப்பாளரை தேடி வருவதாக அவர்கள் கூறீனர்.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com