டெல்லியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 35 பேர் உயிரிழப்பு

டெல்லியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 35 பேர் உயிரிழப்பு
டெல்லியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 35 பேர் உயிரிழப்பு

டெல்லியிலுள்ள அனாஜ் மண்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். 

டெல்லியில் ராணி ஜான்சி சாலையிலுள்ள அனாஜ் மண்டியில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதிக்கு 30 தீயணைப்பு வாகனங்கள் சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்தத் தீ விபத்தில் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 56 பேர் தீ விபத்தில் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தத் தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் பைகள், பாட்டீல்கள் மற்றும் சில பொருட்கள் வைக்கப்பட்டிருந்ததாக முதற்கட்ட தகவலில்  தெரியவந்துள்ளது. இதுவரை இந்தத் தீ விபத்தில் சிக்கியவர்களில் 50 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும்  விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது அஞ்சலியை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com