30,000 மீன்கள் செத்து மிதக்கும் ஹைதராபாத் ஏரி

30,000 மீன்கள் செத்து மிதக்கும் ஹைதராபாத் ஏரி

30,000 மீன்கள் செத்து மிதக்கும் ஹைதராபாத் ஏரி
Published on

ஹைதராபாத் நகரத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள ராம்பள்ளி ஏரியில் நேற்று ஞாயிறு காலை சுமார் 30 ஆயிரம் மீன்கள் செத்து மிதந்தன. அதிகப்படியான வெப்பம் காரணமாக மீன்கள் இறந்ததாக அதிகாரிகள் கூறும் நிலையில், சட்டவிரோதமாக கலக்கப்படும் தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் நகரத்தின் கழிவுகளும் காரணம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ரோகு, கட்லா, பங்காரு தீகா, கோர மீன் ஆகிய மீன் வகைகள் இந்த ஏரியில் செத்து மிதந்தன. ஒரு வாரம் முன்பு ஷமீர்பேட் ஏரியில் 40 ஆயிரம் மீன்களும், மேட்சல் ஏரியில் 20 ஆயிரம் மீன்களும் மடிந்தன. இதுகுறித்து கருத்துத் தெரிவித்த அதிகாரிகள், மீன்கள் மிகவும் மிருதுவானவை. கொளுத்துகின்ற வெயிலின் தாக்கத்தைத் தாங்க முடியாமல் இந்த மீன்கள் மடிந்துவிட்டன. கோடை காலத்தில் ஏரியில் நீர் குறைவாக இருப்பதால் மீன்களுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது என்கின்றனர்.

வெப்பத்தின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த ஏரிகளைச் சுற்றி மரங்கள் வைக்காததும், ஏரிகளில் கலக்கும் வீட்டுக் கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள், நகரக் கழிவுகள் ஆகியவற்றை தடுக்காததுமே காரணம் என்று சுற்றுச்சூழல் அதிகாரிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com