கோயில் பிரசாதத்தில் விஷம் ! மூன்று பெண்கள் கைது

கோயில் பிரசாதத்தில் விஷம் ! மூன்று பெண்கள் கைது
கோயில் பிரசாதத்தில் விஷம் ! மூன்று பெண்கள் கைது

கர்நாடகாவில் விஷம் கலந்த கோயில் பிரசாதம் சாப்பிட்டு இருவர் மரணமடைந்தது தொடர்பாக 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடகாவின் சிக்கபல்லபுரா மாவட்டத்தில் கங்கம்மா கோயில் உள்ளது. இங்கு கடந்த ஜனவரி 25-ஆம் தேதி வழங்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்டதில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் வாந்தி, பேதி உள்ளிடவற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து கோயில் பிரசாதத்தில் விஷம் கலக்கப்பட்டதா..? என்பது குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் கோயில் பிரசாதத்தில் விஷம் கலந்தது தொடர்பாக 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் லஷ்மி, அமராவதி, பார்வதம்மா என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவர்களிடம் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com