ஜம்மு காஷ்மீரின் புல்வாமா ஜடூரா பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் தீவிரவாதிகளைத் தேடும் பணிகள் தொடங்கின. அடுத்த நாளான இன்று காலையில், புல்வாமா மாவட்டத்தில் அடையாளம் காணப்படாத மூன்று தீவிரவாதிகள் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்தன.
அதிகாலை ஒரு மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், மேலும் தேடுதல் பணிகள் தொடர்வதாகவும் காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். தீவிரவாதிகள் மீதான என்கவுண்ட்டர் பற்றிய கூடுதல் தகவல்கள் வெளிவரவில்லை.
வெள்ளிக்கிழமை தாக்குதலில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கடந்த 24 மணி நேரத்தில் ஏழு பேர் என்கவுண்ட்டர் செய்யப்பட்டுள்ளனர்.