துப்பாக்கிச் சண்டை: லஷ்கர் தீவிரவாதிகள் பலி

துப்பாக்கிச் சண்டை: லஷ்கர் தீவிரவாதிகள் பலி
துப்பாக்கிச் சண்டை: லஷ்கர் தீவிரவாதிகள் பலி

ஜம்மு காஷ்மீர் மாநிலம் காக்போரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, ராணுவத்தினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும்  துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் லக்ஷர் இ-தொய்பா அமைப்பை சேர்ந்த மஸ்ஜித் மிர், ஷரிக் அஹமத், மற்றும் இர்ஷாத் அஹமத் என்ற 3 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். அவர்களிடமிருந்து ஏ.கே-47 ரக துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com