பயங்கரவாதிகள் தாக்குதலால் காஷ்மீரில் 3 காவலர்கள் உயிரிழப்பு

பயங்கரவாதிகள் தாக்குதலால் காஷ்மீரில் 3 காவலர்கள் உயிரிழப்பு
பயங்கரவாதிகள் தாக்குதலால் காஷ்மீரில் 3 காவலர்கள் உயிரிழப்பு

ஜம்மூ-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 இந்தியக் காவலர்கள் உயிரிழந்தனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக இந்திய பாதுகாப்புக் காவலர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு பாதுகாப்புப் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை கண்டுபிடித்த காவலர்கள், அந்த இடத்தை சோதனை செய்தனர். இந்நிலையில் அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். 

இதில் குண்டடிபட்ட 3 பாதுகாப்பு காவலர்கள் சம்பவ இடத்திலேயே உயிரழந்தனர். மேலும் ஒருவர் பலத்த காயமடைந்தார். இதையடுத்து படுகாயமடைந்த வீரரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அத்துடன் பாதுகாப்புப் படையினர் தரப்பிலிருந்தும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. பாதுகாப்புத்துறையினர் நடத்திய தாக்குதலில் அந்த இடத்திலிருந்து பயங்கரவாதிகள் இடம்பெயர்ந்துள்ளதால் அவர்கள் பயன்படுத்துவதற்கு வைத்திருந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இதுதொடர்பாக கூறியுள்ள பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகளை சுற்றிவளைத்துள்ளதாகவும், விரையில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். அண்மைக் காலத்தில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலால் காஷ்மீரில் 8 பேர் உயிரிழந்திருந்தனர். தற்போது மேலும் 3 பேர் கொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com