கொரோனா 2-ஆம் அலை இன்னும் முடிவடையவில்லை, நாம் ஓய்வெடுக்கக்கூடாது: அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

கொரோனா 2-ஆம் அலை இன்னும் முடிவடையவில்லை, நாம் ஓய்வெடுக்கக்கூடாது: அமைச்சர் ஹர்ஷ்வர்தன்
கொரோனா 2-ஆம் அலை இன்னும் முடிவடையவில்லை, நாம் ஓய்வெடுக்கக்கூடாது: அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

கோவிட்-19 இரண்டாம் அலை இன்னும் முடிவடையவில்லை, அதனால் நாம் ஓய்வெடுக்கக்கூடாது என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.

இது தொடர்பாக பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன், “ கோவிட்-19 இன் இரண்டாவது அலை இன்னும் முடிவடையவில்லைடெல்லியில் கொரோனா பாதிப்பு நிச்சயமாகக் குறைந்துவிட்டன, ஆனால் ஒன்றரை வருட அனுபவம், நாம் எந்த சூழ்நிலையிலும் ஓய்வெடுக்கக் கூடாது என்று கூறுகிறது. அதுபோல பொதுமக்களும், சமூகமும் ஓய்வெடுக்கக் கூடாது, நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்டவசமாக, கடந்த 6 மாதங்களாக தடுப்பூசிகள் கிடைக்கிறதுஎனவே, கோவிட்-19 விதிமுறைகளை பின்பற்றுவதன் மூலமாகவும், அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போடுவதன் மூலமாகவும், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாம் வெற்றியைப் பெறலாம்” எனத் தெரிவித்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com