இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள கத்துவா அருகே ஹிரா நகரில் ஹெராயின் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த இடத்தில் அதிரடி சோதனை நடத்திய போலீசார் 27 கிலோ அளவிலான ஹெராயினை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 135 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. ஹெராயினை கடத்தியது தொடர்பாக எல்லை பாதுகாப்பு படையினர் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.