மகாராஷ்டிரா: வனப்பகுதியில் பதுங்கியிருந்த 26 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

மகாராஷ்டிரா: வனப்பகுதியில் பதுங்கியிருந்த 26 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
மகாராஷ்டிரா: வனப்பகுதியில் பதுங்கியிருந்த 26 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

மகாராஷ்டிராவில் வனப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சலைட்டுகள் 26 பேரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்.

கத்சிரோலி மாவட்டத்தில் உள்ள கியாராபட்டி வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக அம்மாநில காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, அப்பகுதியை காவல்துறையினர் சுற்றிவளைத்த நிலையில், இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நீடித்தது. காலைமுதல் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 26 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாக மகாராஷ்டிரா காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த துப்பாக்கிச் சண்டையில் காவல்துறை தரப்பில், மூன்று பேர் காயமடைந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com