கேரளாவை உலுக்கிய கொடூர சம்பவம்! 5 கொலை செய்துவிட்டு சரணடைந்த 23 வயது இளைஞர் - பகீர் பின்னணி!
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே வெஞ்சார் மூடு பகுதியில் 23 வயதான அஃபான் தனது காதலி, சகோதரர், பாட்டி மற்றும் இரண்டு உறவினர்கள் உட்பட ஐந்து பேரைக் சுத்தியலால் முகம் மற்றும் தலையில் அடித்தும் கத்தியால் குத்தியும் கொன்றுள்ளார். பிறகு அவரே வெஞ்சார் மூடு காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.
கேரளாவை உலுக்கிய அதிர்ச்சியூட்டும் தொடர் கொலை சம்பவம் நடந்துள்ளது. வெச்சார் மூடு பகுதியைச் சேர்ந்த அஃபான் என்ற 23 வயது இளைஞர் மூன்று வெவ்வேறு இடங்களில் மூன்று வீடுகளில் இந்த கொடூர கொலைகளை அரங்கேற்றி உள்ளார். அவரால் ஐந்து பேர் கொல்லப்பட்டனர், மேலும் அவரது தாய் காயமடைந்துள்ளனர். பலியானவர்களில் அவரது காதலி, அவரது சொந்த சகோதரர் மற்றும் அவரது பாட்டி ஆகியோர் அடங்குவர்.
கொலை செய்யப்பட்டவர்கள் அவரது 14 வயது தம்பி அப்சான், பாட்டி சல்மா பீவி, பெண் நண்பர் ஹர்சானா, தந்தையின் சகோதரன் லத்தீப் மற்றும் அவரது மனைவி ஷாஹிதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் அவரது தாயார் ஷெமி படுகாயமடைந்து கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காலை முதல் மாலை வரை 16 கிலோமீட்டர் சுற்றளவில் மூன்று வீடுகளில் கொலை நிகழ்ந்துள்ளது. முதலில் பாங்கோடு பகுதியில் உள்ள தனது பாட்டி அதாவது தந்தையின் தாயை கொலை செய்த பின்பு SN புரம் என்ற இடத்தில் தந்தையின் சகோதரன் மற்றும் அவரது மனைவியை கொலை செய்த பின்பு கொலையாளி வெஞ்சர் மூடு பேருமலை யில் உள்ள தனது வீட்டில் வைத்து 14 வயது தம்பி, பெண் நண்பர், மற்றும் தாயை கொலை செய்ததாக வாக்கு மூலம் அளித்துள்ளாஅர்.
தொடர் கொலைகளைத் தொடர்ந்து, அஃபான் வெஞ்சார் மூடு காவல் நிலையத்தில் தானாக முன்வந்து சரணடைந்து, ஆறு கொலைகளைச் செய்ததாக ஒப்புக்கொண்டார். இதன் மூலம் வெஞ்சார் மூட்டில் மட்டுமல்ல, பாங்கோடு மற்றும் எஸ்.என். புரத்திலும் கொலைகள் நடந்திருப்பது அதிர்ச்சியூட்டும் வகையில் தெரியவந்தது. சரணடைந்த பிறகு, அவர் விஷம் குடித்ததாகக் கூறி, திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
போலீசார் தற்போது அஃபானின் அளித்த வாக்குமூலங்களை சரிபார்க்க விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல்துறை அறிக்கைகளின்படி, கொலைகளுக்குப் பின்னால் நிதி நெருக்கடியே காரணம் என்று அஃபான் கூறினார். வெளிநாட்டில் அவரது தொழில் தோல்வியடைந்ததால், அவர் கடுமையான கடனில் சிக்கினார், சுமார் 75 லட்சம் ரூபாய் கடன் இருப்பதாக கூறப்படுகிறது. இது அவரை குற்றங்களைச் செய்யத் தூண்டியதாகக் கூறப்படுகிறது. சரணடைந்த பிறகு, அவர் விஷம் குடித்ததாகக் கூறி, சிகிச்சைக்காக திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அஃபான் தனது தந்தையுடன் வெளிநாட்டில் வசித்து வந்தார், ஆனால், சமீபத்தில் இந்தியா திரும்பினார். அவரது தாயார் ஷமீனா புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார். வெளிநாட்டில் அவரது உதிரி பாகங்கள் வணிகம் தோல்வியடைந்ததால் குடும்பம் குறிப்பிடத்தக்க நிதிப் பொறுப்புகளைச் சேகரித்தது, இதனால் அஃபான் பலரிடம் இருந்து பெரிய தொகையை கடன் வாங்க வேண்டியிருந்தது.
போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், அஃபான், அதிக கடன் சுமையால் வாழ்க்கை தாங்க முடியாததாக உணர்ந்ததாக ஒப்புக்கொண்டார். தனது குடும்பத்தையும், தன்னையும் கொல்ல முடிவு செய்த அவர், அதுதான் ஒரே வழி என்று நம்பினார். தனது காதலியை கொலை செய்வதற்கு முன்பு, அவளை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று, தான் தற்கொலை செய்து கொண்டால் அவள் தனியாக விடப்படுவாள் என்ற பயத்தில் கொலை செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.
கொலையாளி போதை பழக்கத்திற்கு அடிமை எனவும் போலீசார் தரப்பில் கூறப்படும் நிலையில் கடன் தொல்லையா??? தனது காதலை குடும்பத்தினர் ஏற்க மறுத்ததா இந்த கூட்ட கொலைக்கு காரணம் என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.