காணாமல் போன 200 காவலர்கள்: கலக்கத்தில் பீகார் காவல்துறை

காணாமல் போன 200 காவலர்கள்: கலக்கத்தில் பீகார் காவல்துறை

காணாமல் போன 200 காவலர்கள்: கலக்கத்தில் பீகார் காவல்துறை
Published on

பீகாரில் காவலர்கள் 200 பேர் தலைமறைவாகியுள்ளது சற்று அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

காவல் நிலையத்திற்கு செல்லும் பொதுமக்கள் தங்களின் பொருட்களை, நபர்களை காணவில்லை எனப் புகார் தெரிவிப்பர். சீனாவில் கூட கடந்த மாதம் ரோட்டக் காணோம் அப்படீன்னு வித்தியாசமான புகார் கூட வந்தது. ஆனால் இந்தியாவில் தற்போது அதையும் தாண்டி வித்தியாசமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. இங்கு பணியில் இருந்த காவலர்களை காணவில்லை.

பீகார் மாநிலம் பாட்னா உள்ளிட்ட சில இடங்களில் பணியாற்றி வந்த 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் காணவில்லை எனத் தெரியவந்துள்ளது. அவர்கள் எந்தத் தகவலும் அளிக்காமல் பணியில் இருந்து விலகிச் சென்றுள்ளது தெரியவந்திருக்கிறது. பாட்னா உள்ளிட்ட இடங்களில் பணியாற்றி வந்த அவர்களில் பலர், பல மாதங்களாக பணியில் இல்லை என்பது இப்போது தான் கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் எங்கு சென்றார்கள், என்ன ஆனார்கள் என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை. டிஐஜி ராஜேஷ் குமார் நடத்திய துறை ரீதியான ஆய்வின் போது இந்த விஷயம் தெரியவந்திருக்கிறது. சம்பந்தபட்ட காவலர்களை கண்டுபிடித்து, அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப பீகார் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com