குஜராத்தில் வதோதரா மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு சொந்தமான வேன் ஒன்று, மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக, வேனின் பின்புற கதவு திறந்ததில், அதிலிருந்த இரண்டு மாணவிகள் சாலையின் நடுவே விழுந்துள்ளனர்.
இதில் இருவரும் காயமடைந்தனர். தொடர்ந்து, அப்பகுதி மக்கள் மாணவிகளை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இந்த காட்சிகள், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன.
பின்பக்க கதவு சரியாக மூடப்படாத காரணத்தால், மாணவிகள் வெளியே தவறி விழுந்துள்ளதாக தெரிகிறது.