ஐபிஎல் சூதாட்டம்: 19 வயது இளைஞர் தற்கொலை..!

ஐபிஎல் சூதாட்டம்: 19 வயது இளைஞர் தற்கொலை..!
ஐபிஎல் சூதாட்டம்: 19 வயது இளைஞர் தற்கொலை..!

தெலங்கானா மாநிலம் புஞ்சகுட்டா பகுதியில் 19வயது இளைஞர் ஒருவர் ஐபிஎல் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஜார்க்கண்டைச் சேர்ந்த சோனு குமார் (19) என்ற தொழிலாளி ஹைதராபாத்தின் புஞ்சகுட்டா பகுதியில் வசித்து வந்துள்ளார்.
தேங்காய் விற்கும் தொழில் செய்துவந்த சோனு, ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டவுடன் சொந்த ஊரான ஜார்க்கண்டுக்கு சென்ற சோனு தற்போது தான் மீண்டும் புஞ்சகுட்டா பகுதிக்கு வந்துள்ளார். வந்தது முதல் அவர் ஐபிஎல் சூதாட்டங்களில் ஈடுபட்டதாக தெரிகிறது. பலமுறை பணத்தை இழந்த அவர் தன் நண்பர்களிடம் கடன் வாங்கி மீண்டும் மீண்டும் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் அதிக கடன் சுமை அதிகரிக்க விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் சோனு. இந்த தகவலை போலீசார் தெரிவித்துள்ளனர். சோனு தற்கொலை குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீப நாட்களாக ஆன்லைன் சூதாட்டங்கள் பலரின் உயிரையும் காவுவாங்கி வரும் நிலையில் ஐபிஎல்லை மையமாக வைத்தும் பல இடங்களில் சட்டவிரோதமாக சூதாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து சூதாட்டங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050, +91 44 2464 0060

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com