நவி மும்பை : 19 வயது பெண் பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது

நவி மும்பை : 19 வயது பெண் பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது
நவி மும்பை : 19 வயது பெண் பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது

கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதியன்று நவி மும்பையின் கார்கர் பகுதியில் 19 வயது பெண்ணை பேருந்துக்குள் வைத்து இருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அந்த குற்றச்செயலில் ஈடுபட்ட இருவரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த பெண்ணுக்கு கூல் ட்ரிங்ஸில் மயக்க மருந்தை கலந்து இந்த குற்றச்செயலை செய்துள்ளனர் குற்றவாளிகள் இருவரும். தப்பியோடிய ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். 

“பாதிக்கப்பட்ட பெண்ணும், குற்றவாளிகளும் ஒரே கட்டடத்தில் தான் தங்கி வந்துள்ளனர். சம்பவத்தன்று அந்த கட்டடத்தில் திருமண கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்போது அந்த பெண்ணுக்கு குற்றவாளிகள் இருவரும் கூல் ட்ரிங்ஸ் கொடுத்துள்ளனர். அதை குடித்ததும் அவருக்கு மயக்கம் வந்துள்ளது. தொடர்ந்து அவரை குற்றவாளிகள் அருகாமையில் நிறுத்தியிருந்த பேருந்துக்குள் தூக்கிச் சென்று மீண்டும் மயக்க மருந்து கலந்த கூல் ட்ரிங்ஸை கலந்து கொடுத்துள்ளனர். தொடர்ந்து அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்” என போலீசார் தெரிவித்துள்ளனர்.

குற்றவாளிகளில் ஒருவர் அந்த பேருந்தின் ஓட்டுநர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com