டெல்லியில் ‌17 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி

டெல்லியில் ‌17 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி
டெல்லியில் ‌17 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி

சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து டெல்லி திரும்பிய 17 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டெல்லி பன்னாட்டு விமான நிலையத்தில், ‌ஜனவரி மத்தியிலிருந்து மருத்துவக் குழுக்கள் நியமிக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்‌ளது.

இதுபோன்ற சூழலில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த 5,700 பயணிகள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில், 17 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இதன் எதிரொலியாக, சீனா, ஹாங்காங், தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளை தீவிரமா‌க கண்காணிக்குமாறு விமானநிலைய அதிகாரிகளை சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com