டெல்லி தீவிபத்து: 2 தமிழர்கள் உள்பட 17 பேர் உயிரிழப்பு

டெல்லி தீவிபத்து: 2 தமிழர்கள் உள்பட 17 பேர் உயிரிழப்பு

டெல்லி தீவிபத்து: 2 தமிழர்கள் உள்பட 17 பேர் உயிரிழப்பு
Published on

டெல்லியில் கரோல்பாக் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 2 பேர் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர். 

மத்திய டெல்லியில் உள்ள கரோல் பாக் பகுதியில் அர்பித் பேலஸ் என்ற நட்சத்திர ஓட்டல் உள்ளது. அந்த ஓட்டலில் நேற்று அதிகாலை 4.35 மணிக்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அப்போது 150-க்கும் மேற்பட்டோர் ஓட்டலில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்த தீ மளமளவென பரவியது.

இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் 28 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த முயன்றனர். எனினும் இந்த விபத்தில் தூங்கி கொண்டிருந்த, பெண்கள், உள்ளிட்ட 17 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தின் கோவையைச் சேர்ந்த அரவிந்த் சிவகுமரன் மற்றும் நந்தகுமார் ஆகியோரும் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களில் மேலும் ஒருவரும் தமிழகத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. விபத்திலிருந்து 35 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், படுகாயமடைந்த சிலர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து ஏற்பட்ட பகுதியை, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நேரில் சென்று பார்வையிட்ட நிலையில், உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்துவதற்கு டெல்லி உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஓட்டல் பொது மேலாளர் ராஜேந்தர் என்பவரும் மேலாளர் விகாஸ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேசமயம் ஓட்டல் உரிமையாளர் தலைமறைவாகிவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஓட்டலில் பல்வேறு விதிமுறை மீறல்கள் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com