சிறுமியைத் திருமணம் செய்த இளைஞர்..! - மணமகன், பெற்றோர் மீது வழக்குப்பதிவு

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞர்..! - மணமகன், பெற்றோர் மீது வழக்குப்பதிவு

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞர்..! - மணமகன், பெற்றோர் மீது வழக்குப்பதிவு
Published on

தெலங்கானாவில் 16 வயது பெண்ணுக்கும் 23 வயது இளைஞருக்கும் இடையே திருமணம் நடைபெற்றது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் உள்ள ஹைதராபாத்திலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மெத்ஜால் மாவட்டத்தின் கந்தலகொயா கிராமத்தில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இந்தத் திருமணத்தில் 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். திருமணத்தில் பங்கேற்றவர்கள் யாரும் முகக்கவசம் அணியாமல் மணமக்களைச் சுற்றி நின்றுள்ளனர்.

இந்தத் திருமணம் தொடர்பாகக் குழந்தை திருமணம் தடுப்புப்பிரிவுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. தகவலின் அடிப்படையில் அவர்கள் சென்று விசாரித்ததில் மணமகளின் வயது 16 என்பது உறுதி செய்யப்பட்டது. இந்தச் சிறுமியை 23 வயது இளைஞருக்குத் திருமணம் செய்து வைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மணப்பெண்ணின் பெற்றோர், மணமகனின் பெற்றோர் மற்றும் மணமகன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

அவர்கள் மீது போக்சோ, குழந்தைத் திருமணம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. குழந்தைத் திருமணத்திற்கு எதிரான சட்டங்கள் இருக்கும் நிலையிலும் தெலங்கானாவில் அதிகமான குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com