ஆந்திராவில் மினி பேருந்து - லாரி மோதி விபத்து: 14 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் மினி பேருந்து - லாரி மோதி விபத்து: 14 பேர் உயிரிழப்பு
ஆந்திராவில் மினி பேருந்து - லாரி மோதி விபத்து: 14 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் மினி பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 8 பெண்கள் உட்பட 14 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 18 பேர் மினி பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, கர்னூல் அருகே உள்ள மாதபுரம் பகுதியில், திடீரென எதிரே வந்த லாரியுடன், மினி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், பேருந்தில் பயணித்த 8 பெண்கள் உட்பட 14 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்தை வேகமாக இயக்கியதே விபத்துக்கு காரணம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com