கர்நாடகாவில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 14 பேர் கட்சியிலிருந்து நீக்கம்

கர்நாடகாவில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 14 பேர் கட்சியிலிருந்து நீக்கம்
கர்நாடகாவில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 14 பேர் கட்சியிலிருந்து நீக்கம்

கர்நாடகாவில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட 14 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். 

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்கள் திடீரென ராஜினாமா செய்ததோடு, மும்பைக்கு சென்று சொகுசு ஹோட்டலில் தங்கினர். இதையடுத்து நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியடைந்த நிலையில், 14 எம்.எல்.ஏ.க்களையும் சபாநாயகர் ரமேஷ் குமார் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார். 

இந்த நிலையில், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட 14 பேரும் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அகில இந்தய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com