தாயகம் திரும்பிய விமானம்: ஆப்கானிஸ்தானிலிருந்து 120 இந்தியர்கள் மீட்பு

தாயகம் திரும்பிய விமானம்: ஆப்கானிஸ்தானிலிருந்து 120 இந்தியர்கள் மீட்பு
தாயகம் திரும்பிய விமானம்: ஆப்கானிஸ்தானிலிருந்து 120 இந்தியர்கள் மீட்பு

ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியர்களை மீட்டு வந்த சி 17 போர் விமானம் தாயகம் வந்தடைந்தது.

தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து அங்கு சிக்கி இருந்த இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். ஏற்கெனவே ஏர் இந்தியா விமானம் மூலம் முதல் குழுவினர் வந்தடைந்தனர். காபூல் விமானநிலையம் மூடப்பட்டதால் தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களின் பாதுகாப்புக்காக சென்றிருந்த வீரர்கள் என பலர் தாயகம் திரும்புவதில், சிக்கல் ஏற்பட்டது.

இதனிடையே அமெரிக்கா சென்றுள்ள வெளியறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்கா வெளியுறவு துறை அமைச்சர் பிளிங்கனுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து , காபூலில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்பதற்கான அனுமதி கிடைத்தது. இதனை அடுத்து தொடர்ந்து இந்தியா விமானப்படை விமானம் காபூலில் இருந்து 120 இந்தியர்களை மீட்டு கொண்டு பத்திரமாக குஜராத் மாநிலத்தை வந்தடைந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com