துறவியானார் கோடீஸ்வர வைர வியாபாரியின் 12 வயது மகன்!

துறவியானார் கோடீஸ்வர வைர வியாபாரியின் 12 வயது மகன்!
துறவியானார் கோடீஸ்வர வைர வியாபாரியின் 12 வயது மகன்!

குஜராத்தில் கோடீஸ்வர வைர வியாபாரியின் 12 வயது மகன் துறவறம் பூண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் வைர வியாபாரி திபேஷ் ஷா. ஜைன சமூகத்தைச் சேர்ந்த இவருக்கு 2 மகன், ஒரு மகள். மகள் பிரியாம்ஷி நான்கு வருடத்துக்கு முன் தனது 12 வயதில் ஜைன துறவியாகிவிட்டார். இப்போது 12 வயது மகன் பவ்யா ஷாவும் துறவறம் பூணும் ஆசையை வீட்டில் சொன்னார். மகிழ்ச்சியடைந்த குடும்பத்தினர், அதற்கு ஒப்புக்கொண்டனர். இதையடுத்து இதற்கான விழாவை குஜராத்தில் நேற்று முன் தினம் நடந்தது. பிரமாண்டமாக நடந்த இந்த விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

’குடும்ப வாழ்க்கையில் ஒவ்வொரு அடியிலும் பாவம் இருக்கிறது. அந்த பாவத்தில் இருந்து விடுபட துறவியாக மாற முடிவு செய்தேன். இது எனது தனிப்பட்ட முடிவுதான். இது  மகிழ்ச்சி அளிக்கிறது. எனது பெற்றோரும் வருங்காலத்தில் இந்தப் பாதைக்குத் திரும்புவார்கள் என்று நம்புகிறேன்’ என்றான் பாவ்யா.

கோடீஸ்வர வைர வியாபாரியின் மகன் இப்படி திடீர் துறவறம் பூண்டதில் அவனது பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்தாலும் மற்றவர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com