மழையில் சிக்கிய ரயிலில் இருந்து 117 பேர் மீட்பு

மழையில் சிக்கிய ரயிலில் இருந்து 117 பேர் மீட்பு
மழையில் சிக்கிய ரயிலில் இருந்து 117 பேர் மீட்பு

மழை வெள்ளத்தில் சிக்கி நடுவழியில் நிற்கும் மகாலட்சுமி ரயிலில் இருந்து, குழந்தைகள் உட்பட 117 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. அங்கு பெய்து வரும் பலத்த மழையால் சாலை கள் மற்றும் பல குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், மும்பை - கோலாப்பூர், மகாலட்சுமி எக்ஸ் பிரஸ் ரயில், மழை வெள்ளம் அதிகமாக சூழந்துள்ள பட்லாபூர், வங்கானி பகுதியில் சிக்கியது. இந்த ரயிலில் 700-க்கும் மேற் பட்ட பயணிகள் உள்ளனர்.

அவர்களை பத்திரமாக மீட்க, ரயில்வே நிர்வாகமும் மகாராஷ்டிர அரசும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தேவைப்பட் டால், பயணிகளை விமானம் மூலம் மீட்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரயில்வே பாதுகாப்பு படையினரும் பேரிடர் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர். அவர்கள் இதுவரை பெண்கள், குழந்தைகள் உட்பட 117 பேரை மீட்டுள்ளனர். தொடர்ந்து, மீட்பு பணி நடந்து வருகிறது. 

இதற்கிடையே ரயிலில் இருக்கும் பயணிகள் யாரும் வெளியே இறங்க வேண்டாம் என்று ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. பயணிகளுக்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்கவும் ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com