கோயில் அஸ்திவார பூஜையில் 11 ஆயிரம் லிட்டர் பால், தயிர் ஊற்றிய பக்தர்கள்!

கோயில் அஸ்திவார பூஜையில் 11 ஆயிரம் லிட்டர் பால், தயிர் ஊற்றிய பக்தர்கள்!
கோயில் அஸ்திவார பூஜையில் 11 ஆயிரம் லிட்டர் பால், தயிர் ஊற்றிய பக்தர்கள்!

ராஜஸ்தான் மாநிலத்தில் கட்டப்பட உள்ள ஒரு கோயில் கட்டுமானப் பணியின் அஸ்திவார பூஜையின் போது தோண்டப்பட்டிருந்த குழியில் பக்தர்கள் 11,000 லிட்டர் பால், தயிர் மற்றும் நெய்யை ஊற்றினர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில் தேவ்நாராயணன் என்ற கோயில் ஒன்று ரூ .1 கோடி செலவில் கட்டப்பட உள்ளது. அந்த கோயில் கட்டுமானத்திற்காக அடிக்கல் நாட்டும் விழா சமீபத்தில் நடைபெற்றது. அதன் அஸ்திவார பூஜையின் போது தோண்டப்பட்ட குழியில் பக்தர்கள் 11 ஆயிரம் லிட்டர் பால், தயிர் மற்றும் நெய்யை ஊற்றி வழிபாடு நடத்தினர்.

இதுகுறித்து கோயில் கட்டுமானக் குழுவின் செய்தித் தொடர்பாளர் ராம்லால் குஜ்ஜார் கூறுகையில், “தேவ்நாராயண் கோயிலின் அஸ்திவார விழாவிற்கு குஜ்ஜார் சமூக உறுப்பினர்கள் மற்றும் பிறரிடமிருந்து 11,000 லிட்டர் பால், நெய் மற்றும் தயிர் ஆகியவற்றை நாங்கள் சேகரித்தோம். பால், தயிரை பக்தர்கள் தாராளமாக வழங்கினர். 11000 லிட்டரில், 1500 லிட்டர் தயிர் மற்றும் 1 குவிண்டால் நெய் இருந்தது. இதன் மொத்த செலவு கிட்டத்தட்ட ரூ .1.50 லட்சம் ஆகும்” என்றார்.

இதுகுறித்து அப்பகுதிவாசி ராம்லால் கூறுகையில், “இதுபோன்ற விழாக்களுக்கு பால் ஊற்றுவது குஜ்ஜார் சமூகத்தின் கட்டாய வழக்கம் கிடையாது. ஆனால் இது கடந்த காலத்திலும் சில முறை செய்யப்பட்டுள்ளது. ஆண்டவர் நமக்குக் கொடுப்பதை ஒப்பிடுகையில் இது ஒன்றுமில்லை.  தெய்வத்தின் மீது நாம் கொஞ்சம் பால் ஊற்றுகிறோம். அது நம் கால்நடைகளைப் பாதுகாக்கிறது என்ற நம்பிக்கை” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com