வெள்ளம்போல் பெட்ரோல் கொட்டி கிடக்கும்போது லைட்டரை பற்றவைத்த நபர் - பறிபோன 11 உயிர்!

வெள்ளம்போல் பெட்ரோல் கொட்டி கிடக்கும்போது லைட்டரை பற்றவைத்த நபர் - பறிபோன 11 உயிர்!
வெள்ளம்போல் பெட்ரோல் கொட்டி கிடக்கும்போது லைட்டரை பற்றவைத்த நபர் - பறிபோன 11 உயிர்!

மிசோரம் மாநிலம் துய்ரியால் விமான தளம் அருகே பெட்ரோல் ஏற்றி வந்த டேங்கர் லாரி தீப்பற்றி எரிந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கடந்த அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி 22 ஆயிரம் லிட்டர் பெட்ரோலை ஏற்றிக் கொண்டு சென்ற டேங்கர் லாரி, விபத்தில் சிக்கி கவிழ்ந்தது. அப்போது கீழே சிந்திய பெட்ரோலை பிடித்துச் செல்ல அக்கம் பக்கத்தில் உள்ள மக்கள் முண்டியடித்தாக கூறப்படுகிறது. அப்போது திடீரென ஏற்பட்ட தீ விபத்தால், பெட்ரோலை பிடிக்க வந்த பொதுமக்கள் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில், டேங்கர் லாரி மத்தியில் சிகரெட் லைட்டரை பற்ற வைத்து தீ விபத்துக்கு காரணமாக இருந்த நபரை உள்ளூர் மக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். இதைத் தொடர்ந்து அவரை கைதுசெய்த காவல்துறையினர் நீதிமன்ற காவலில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com