இம்மாத இறுதிக்குள் இந்தியா வரும் 17 ஆயிரம் டன் வெங்காயம்
துருக்கி மற்றும் எகிப்து நாடுகளில் இருந்து சுமார் 17 ஆயிரம் டன் வெங்காயம் இந்த மாத இறுதிக்குள் வரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய வெங்காய சாகுபடி அதிகமுள்ள மாநிலங்களில் பருவம் தவறிய மழையால் வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வெங்காயத்திற்கு நாடு முழுவதும் தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை ஒரு கிலோ நூறு ரூபாய்க்கு மேல் சென்றது. விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், தட்டுப்பாட்டை சமாளிக்கவும் வெளிநாடுகளில் இருந்து சுமார் ஒரு லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய அரசு முடிவு செய்தது.
துருக்கி, எகிப்து உள்ளிட்ட நாடுகளுக்கு கொள்முதல் ஆர்டர் வழங்கப்பட்டுள்ள நிலையில், டிசம்பர் இறுதி மற்றும் ஜனவரி முதல் வாரத்திற்குள் துருக்கியில் இருந்து 11 ஆயிரம் டன்னும், எகிப்தில் இருந்து 6 ஆயிரத்து 90 டன்னும் வெங்காயம் இந்தியா வந்து சேரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.