ஒடிஷா : 1946 முதல் பள்ளிக்கூடம் நடத்தி வரும் 102 நந்த கிஷோர் தாத்தாவுக்கு பத்மஸ்ரீ விருது

ஒடிஷா : 1946 முதல் பள்ளிக்கூடம் நடத்தி வரும் 102 நந்த கிஷோர் தாத்தாவுக்கு பத்மஸ்ரீ விருது
ஒடிஷா : 1946 முதல் பள்ளிக்கூடம் நடத்தி வரும் 102 நந்த கிஷோர் தாத்தாவுக்கு பத்மஸ்ரீ விருது

ஒடிஷா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள சுகிந்தா வட்டத்தின் கந்திரா கிராமத்தை சேர்ந்தவர் 102 வயதான தாத்தா நந்த கிஷோர் பிருஸ்டி. கடந்த 1946 முதலே தனது கிராமத்தில் சாட்டசாலி என்ற பள்ளிக்கூடத்தை நடத்தி வருகிறார். அந்த கிராமத்தை ஒட்டியுள்ள ஊரக பகுதி பிள்ளைகளுக்கு அந்த பள்ளிக்கூடம் என்றால் கொள்ளை இஷ்டமாம். ஏழாம் வகுப்புக்கு மேல் பள்ளிக்கூடத்தின் பக்கம் செல்லாத அவர் மாணவர்களுக்கு வாழ்க்கை பாடத்தை போதித்து வருகிறார். அவரது பணியை பாராட்டி பத்மஸ்ரீ விருது கொடுக்கப்பட்டுள்ளது. 

நான்காம் வகுப்பு வரை இந்த பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் பயின்று வருகின்றனர். நந்த கிஷோர் தாத்தாவுக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்துள்ள செய்தியை அறிந்ததும் அவரிடம் பயின்ற முன்னாள் மாணவர்களும், இந்நாள் மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். அவரிடம் பயின்ற மாணவர்கள் பலர் மருத்துவர், பொறியாளர் மற்றும் அரசு அதிகாரிகளாகவும் பணியாற்றி வருகின்றனர். 

“மாணவர்களுக்கு போதிப்பது தான் என் வாழ்நாளில் நான் பெற்ற சிறந்த விருது” என மாறாத குழந்தை சிரிப்புடன் பத்மஸ்ரீ விருது பெற்ற அனுபவத்தை சொல்கிறார் நந்த கிஷோர் தாத்தா. இவர் தான் ரியல் இந்தியன் தாத்தா. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com