சபரிமலையில் நாள்தோறும் 1000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி !

சபரிமலையில் நாள்தோறும் 1000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி !
சபரிமலையில் நாள்தோறும் 1000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி !

மண்டல, மகர விளக்கு சீசன்களின் போது, சபரிமலையில் நாள்தோறும் 1000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயிலில், கடந்த பல மாதங்களாக, மாத பூஜை நாட்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனில் கொரோனா கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி பக்தர்களை சாமி தரிசனத்துக்கு அனுமதிப்பது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய கேரளா தலைமை செயலாளர் விஸ்வாஸ் மேத்தா தலைமையில் உயர்மட்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது.

அவர்கள் அளித்த அறிக்கையின்படி, தினசரி 1000 பக்தர்கள் மட்டும் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும், 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட பக்தர்கள் மட்டுமே சாமியை தரிசனம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் 2 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் எனக்கூறியுள்ள கேரள அரசு, மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜை நடைபெறும் நாட்களில் 5 ஆயிரம் பேர் சாமியை தரிசிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com