சிலிண்டர் வெடித்து இடிந்தது வீடு: 10 பேர் உயிரிழப்பு!

சிலிண்டர் வெடித்து இடிந்தது வீடு: 10 பேர் உயிரிழப்பு!
சிலிண்டர் வெடித்து இடிந்தது வீடு: 10 பேர் உயிரிழப்பு!
Published on

உத்தரபிரதேசத்தில் சிலிண்டர் வெடித்து வீடு இடிந்து விழுந்ததில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

உத்தரபிரதேச மாநிலம் மாவ் மாவட்டத்தில் உள்ளது, மொஹமதாபாத் பகுதி. இங்கு இரண்டு மாடிகளை கொண்ட வீடு ஒன்றில், இன்று காலை திடீரென பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்தது. இதையடுத்து வீடு மொத்தமாக இடிந்து விழுந்தது. இதில் சிக்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுவதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் எனத் தெரிகிறது. காயமடைந்த பலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர்.

தீயணைப்புத் துறையினரும் அந்தப் பகுதியை சேர்ந்தவர்களும் மீட்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 

உயிரிழந்தவர்களுக்கு உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தேவையான நிவாரணம் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com