“முதலில் பேச்சுவார்த்தை, பின்னர் முதல்வர் யார் என முடிவு” - சிவசேனா 

“முதலில் பேச்சுவார்த்தை, பின்னர் முதல்வர் யார் என முடிவு” - சிவசேனா 

“முதலில் பேச்சுவார்த்தை, பின்னர் முதல்வர் யார் என முடிவு” - சிவசேனா 
Published on

மகாராஷ்டிரா முதல்வர் யார் என்பது குறித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பேட்டி அளித்துள்ளார். 

மகாராஷ்டிராவில் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட பாதிக்குப் பாதி என்ற அடிப்படையில் பாரதிய ஜனதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அதன் பின்னரே முதலமைச்சர் யார் என்பது முடிவு செய்யப்படும் என்றும் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ள‌ர். 

மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மகாராஷ்டிரா மாநிலத் தேர்தல் முடிவுகள் பலருக்கும் புதிய கோணத்தை காட்டும் என‌க் கூறினார். பாரதிய ஜனதா கேட்டுக்கொண்டதாலேயே சிவசேனா குறைவான தொகுதிகளில் போட்டியிட்டதாகவும், எப்போதும் இதுபோல் இருக்கமுடியாது என்றும் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். 

மேலும் தமது மகன் ஆதித்யா தாக்கரே தேர்தலில் வெற்றி பெற்றது குறித்தும் ‌அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com