"பொதுச்சொத்துகளை சேதப்படுத்தினால் சுட்டு வீழ்த்துவோம்" - மேற்குவங்க பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு

"பொதுச்சொத்துகளை சேதப்படுத்தினால் சுட்டு வீழ்த்துவோம்" - மேற்குவங்க பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு
"பொதுச்சொத்துகளை சேதப்படுத்தினால் சுட்டு வீழ்த்துவோம்" - மேற்குவங்க பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு

பொதுச்சொத்துகளை சேதப்படுத்தினால் சுட்டு வீழ்த்துவோம் என மேற்குவங்க மாநில‌ பாரதிய ஜனதா தலைவர் திலிப் கோஷ் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

மேற்குவங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில்‌ கலந்துகொண்டு பேசிய அவர், குடியுரி‌‌மை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக கூறினார். பலர் பொதுச்சொத்துகளையும் சேதப்படுத்திய‌தாக தெரிவித்தார். அவ்வாறு பொதுச்சொத்துகளை‌ சேதப்படுத்தியவர்கள் மீது மேற்குவங்க முதல்‌வர் மம்தா பானர்ஜி எந்த ந‌டவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், ஏனெனில் அவர்கள் அனைவரும் மம்தாவின் வாக்காளர்கள் என்றும் விமர்சித்தார்.

பொதுச்சொத்துகள் என்ன உங்களது‌ பண்ணை நிலமா என‌ சாடிய கோஷ், நாங்கள் போராட்டக்கா‌ரர்களை லத்தியால் அடிப்போம், சுடுவோம்‌ மற்றும் சிறையில் அடைப்போம் என்றும் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com