“ஒரே நாடு ஒரே தேர்தல்” - கட்சி தலைவர்களுக்கு பிரதமர் அழைப்பு

“ஒரே நாடு ஒரே தேர்தல்” - கட்சி தலைவர்களுக்கு பிரதமர் அழைப்பு

“ஒரே நாடு ஒரே தேர்தல்” - கட்சி தலைவர்களுக்கு பிரதமர் அழைப்பு
Published on

ஒரே சமயத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்த கட்சி தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். 

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இரண்டாவது ஆட்சியின் முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. "ஒரு நாடு, ஒரு தேர்தல்" என்கிற அடிப்படையில் ஆலோசனை நடத்த மோடி தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் ஜூன் 19ஆம் தேதி நடக்கவுள்ள இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றத் துறை அமைச்சரான பிரகலாத் ஜோஷி அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் இதுதொடர்பாக கடிதம் எழுதியுள்ளார். மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துக் கொள்வார்கள். இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. 

அதேபோல், ஜூன் 20 ஆம் இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த அனைத்து எம்.பிக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com