டெல்லியிலும் குடிமக்கள் பதிவேடு: பாஜக கோரிக்கை

டெல்லியிலும் குடிமக்கள் பதிவேடு: பாஜக கோரிக்கை
டெல்லியிலும் குடிமக்கள் பதிவேடு: பாஜக கோரிக்கை

டெல்லியிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட வேண்டும் என்று டெல்லி, பாஜக தலைவர் மனோஜ் திவாரி கூறியுள்ளார்.

தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதிப்பட்டியல் இன்று காலை வெளியிடப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வெளியிடப்பட்டுள்ள இந்தப் பட்டியலில் 19 லட்சத்து 6657 பேரின் பெயர்கள் இடம்பெறவில்லை. 

இந்நிலையில், அசாமை போன்று டெல்லியிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட வேண்டும் என பாஜகவின் டெல்லி மாநில தலைவர் மனோஜ் திவாரி கூறியுள்ளார். அவர் கூறும்போது, ‘டெல்லியின் நிலைமை மோசமாக இருக்கிறது. சட்டவிரோதமாக வெளிநாட்டினர் பலர் இங்கு தங்கியுள்ளனர். அவர்கள் அதிக ஆபத்தானவர்கள். எனவே டெல்லியிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பது அவசியம்’ என்று தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com