’பைபோலார் டிஸார்டர்’ மனநோயினால் சுஷாந்த் சிங் பாதிக்கப்பட்டிருந்தாரா? அதிர்ச்சி தகவல்!

’பைபோலார் டிஸார்டர்’ மனநோயினால் சுஷாந்த் சிங் பாதிக்கப்பட்டிருந்தாரா? அதிர்ச்சி தகவல்!
’பைபோலார் டிஸார்டர்’ மனநோயினால் சுஷாந்த் சிங் பாதிக்கப்பட்டிருந்தாரா? அதிர்ச்சி தகவல்!

கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் சுயசரிதை படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவர் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி தனது அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் பாந்த்ரா போலீசார் முதற்கட்ட விசாரணையில் மன அழுத்தம் காரணமாக நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர். ஆனால் மன அழுத்தத்திற்கான காரணம் என்ன என்பதற்கான மர்ம முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப்படவில்லை. 

இந்நிலையில், சுஷாந்துக்கு மனநல ஆலோசனை வழங்கிய மருத்துவரின் வாக்குமூலத்தையும் போலீசார் பதிவு செய்துள்ளனர். அதில் சுஷாந்த் சிங் இருமுனையப் பிறழ்வு (Bipolar Disorder) எனப்படும் ஒருவித மனநோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக மனநல மருத்துவர் ஒருவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளதாக ‘டைம்ஸ் நவ்’ தெரிவித்துள்ளது.

இருமுனையப் பிறழ்வு என்பது அதிகப்படியான மகிழ்ச்சி மற்றும் அதிகப்படியான கவலை ஒருசேரக் கொண்ட ஒரு மனநோய் என்கின்றனர் மருத்துவர்கள். மேலும் நடிகர் சுஷாந்த் சிங் தனக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை சரிவர எடுத்துக் கொள்ளவில்லை என்று மருத்துவர்கள் போலீசாரிடம் கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர் இந்த மனநல மருத்துவ நிபுணர்களை 2019 நவம்பர் முதல் தொடர்பு கொள்ளத் தொடங்கியதாகவும்,  இரண்டு அல்லது மூன்று வருகைகளுக்குப் பிறகு மருத்துவரை மாற்றிவிடுவதாகவும் அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 சிலநாட்களுக்கு முன்னதாக நடிகையும் சுஷாந்த் சிங்கின் காதலியுமான ரியா சக்கரவர்த்தி, சுஷாந்த் தற்கொலை தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என்று  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டேக் செய்து இக்கோரிக்கையை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com