இடி, மின்னல் தாக்குதலிலிருந்து தப்பிப்பது எப்படி? - அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை

இடி, மின்னல் தாக்குதலிலிருந்து தப்பிப்பது எப்படி? - அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை

இடி, மின்னல் தாக்குதலிலிருந்து தப்பிப்பது எப்படி? - அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை
Published on
இடி மற்றும் மின்னலினால் ஏற்படும் அபாயத்தை மக்கள் குறைத்து மதிப்பிடுவதாலும், விழிப்புணர்வு இல்லாததாலும் மனித உயிரிழப்புகள் மற்றும் ஊனங்கள் அதிகமாக ஏற்படுகின்றன. மின்னல் காரணமாக ஏற்படும் சேதங்கள் மற்றும் இழப்புகளை தவிர்ப்பதற்காக செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை என்னென்ன?
* இடி, மின்னல் தாக்கமலிருப்பதற்கு கட்டிடங்கள் ஒதுங்கக்கூடிய சிறந்த இடமாகும். மரங்களின் கீழே ஒதுங்குவது பாதுகாப்பானது அல்ல.
* கார், பேருந்து உள்ளிட்ட முழுமையாக மூடப்பட்ட வாகனங்களுக்குள் இருக்கும்போது இடி, மின்னல் தாக்காது.
* பாதுகாப்பான இடங்கள் ஏதும் இல்லாதபோது உயரமான பொருள்களுக்கு அருகே செல்வதை தவிர்க்கவும்.
* மின்னல் ஏற்படும்போது செல்போன், தொலைபேசி, டிவி, மிக்ஸி, கிரைண்டர், கணினியை பயன்படுத்தக் கூடாது.
* குழாய்‌ போன்ற உலோக இணைப்புகள்‌ வழியாக மின்னல் பாய்ந்து செல்லக்கூடியது என்பதால், மழை பெய்யும் நேரங்களில் குளிப்பது, பாத்திரம்‌ கழுவுவது போன்ற தண்ணீர்‌ புழங்கும்‌ வேலைகளை தவிர்க்கவும்.
* வெட்ட வெளியில் உலோகப் பொருட்களை உபயோகப்படுத்தாமல் இருப்பது நல்லது.
* ஏரி, குளம்‌, குட்டை, நீச்சல் குளம் போன்ற நீர்‌ நிலைகளிலிருந்து உடனடியாக வெளியேறவும்‌.
* உயர் அழுத்த மின் தடங்களை தாங்கி நிற்கும் கோபுரங்களுக்கு அருகில் செல்வதை தவிர்க்கவும்.
* வீடுகளில் திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு அருகில் நிற்பதை தவிர்க்கவும்.
* வெட்டவெளியில் நிற்கும்போது உடலில் உள்ள உரோமங்கள் சிலிர்ப்பது, உடல் கூச்சம் ஏற்படுவது மின்னல் தாக்குவதற்கான அறிகுறிகளாகும். அச்சமயம் தரையில் குனிந்த நிலையில் உடனடியாக அமர்ந்திட வேண்டும்.
* இடி, மின்னலின்போது கால்நடைகளை மரத்தடியில் கட்டி வைத்திருப்பதை தவிர்க்கவும்.
* மறைவிடம் அற்ற திறந்த மலைப்பகுதியில்‌ இருந்தால், உடனடியாக உயரமான மலை முகடுகள்‌, சிகரங்கள்‌ ஆகியவற்றிலிருந்து விரைந்து கீழிறங்கி சமவெளிக்குச் செல்லவும்‌.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com