நுரையீரலில் சிக்கிய ஊசி.. காந்தம் மூலம் வெளியேற்றி புதுமையான சிகிச்சை! எய்ம்ஸ் மருத்துவர்கள் அசத்தல்

புது டெல்லியில், 7 வயது சிறுவனின் இடது நுரையீரலில் இருந்து தையல் ஊசியை வெளியேற்றி எய்ம்ஸ் மருத்துவர்கள் அசத்தல்.
புது டெல்லி
புது டெல்லிமுகநூல்

புதுடெல்லியை சேர்ந்த 7 வயது சிறுவனின் நுரையீரலில் சிக்கிய ஊசியை காந்தத்தின் உதவி கொண்டு வெற்றிகரமாக வெளியில் எடுத்து எய்ம்ஸ் மருத்துவர்கள் அசத்தியுள்ளனர்.

புதுடெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 1 ஆம் தேதி 7 வயதுடைய சிறுவன் ஒருவன் மூக்கில் ரத்தகசிவு மற்றும் இருமலுடன் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சிறுவனின் உடல்நல கோளாறு என்னவென்று கண்டறிய கதிரியக்க சோதனை செய்து பார்த்ததில், வயிற்றில் தையல் ஊசி இருந்தது தெரிய வந்துள்ளது.

எய்ம்ஸ்
எய்ம்ஸ் முகநூல்

சிறுவனின் வயிற்றில் இருந்த ஊசி எவ்வாறு வெளியேற்றப்பட்டது, அதற்காக என்ன மருத்துவ முறை கையாளப்பட்டது என்று இச்சிகிச்சையில் தொடர்புடைய எய்ம்ஸ் மருத்துவமனை குழந்தைகள் மருத்துவ நிபுணர்கள் டாக்டர் விஷேஷ் ஜெயின், டாக்டர் தேவேந்திர குமார் யாதவ், தொழிநுட்ப அதிகாரி சத்யபிரகாஷ் ஆகியோர் அடங்கிய குழு இது குறித்து தெரிவித்தனர்.

அத்தகவலின் படி, ”1ஆம் தேதி தீவிர இருமல் மற்றும் மூக்கில் ரத்தகசிவு காரணமாக மருத்துவமனையில் இச்சிறுவன் அனுமதிக்கப்பட்டார்.

சிறுவனின் உடல்நல குறைவுக்கான காரணம் என்னவென்று கண்டறிய x ray செய்து பார்த்ததில் சிறுவனின் இடது நுரையீரலில் 4 செமீ அளவிலான தையல் ஊசி ஒன்று இருப்பது தெரியவந்தது.

ஊசி
ஊசிமுகநூல்

இந்த ஊசி எப்படி அச்சிறுவனின் நுரையீரலுக்குள் சென்றது என்ற தகவலை சிறுவனின் குடும்பத்தினர் தெரிவிக்கவில்லை.

எனவே இந்த ஊசியை வழக்கமான மருத்துவமுறை கொண்டு அகற்றுவது மிகவும் ஆபத்தானதாக அமையும். ஏனென்றால் ஊசி சிக்கி கொண்டுள்ள பகுதி மிகவும் சிறியது. எனவே இதற்கு புதுமையான மருத்துவமுறையை கையாளுவதே சரியான தீர்வாக அமையும் என்று முடிவு செய்யப்பட்டது.

புது டெல்லி
“மூச்சு இரைச்சல் அதிகமா இருக்கா..”- கொரோனா சிகிச்சையும், திடீர் மாரடைப்பும்.. மருத்துவரின் விளக்கம்!

இந்நிலையில் இதற்காக 4.மி,மீ அகலம் மற்றும் 1.5 மி.மீ பருமன் கொண்ட காந்தம் வாங்கிவரப்பட்டு அத்துடன் காந்த நூலை பொருத்தி, ஒரே ஒரு தாடையுடன் ஊடிய சிறப்பு கருவியை கொண்டு இந்த ஊசியை வெளியேற்ற திட்டமிடப்பட்டது. மேலும் நுரையீரலில் ஊசி இருக்கும் இருப்பிடத்தை கண்டறிய எண்டோஸ்கோபிக் செயல்முறை மேற்கொள்ளப்பட்டு சுவாசக் குழாயின் வழியாக இக்காந்தமானது செலுத்தப்பட்டது.

உள்ளே சென்ற காந்தம் உடனடியாக ஊசியை பற்றி பிடிக்கவே சுமூகமாக வெளியில் வெற்றிகரமாக எடுக்கப்பட்டது தையல் ஊசி.

இப்புதிய முறை வெற்றியடையாமல் இருந்திருந்தால் நிச்சயம் மார்பையும் நுரையீரலையும் திறந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஊசியானது வெளியேற்றப்பட்டிருக்கும்.” என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இப்படி குழந்தைகள் விளையாட்டுதனமாக என்னவென்று அறியாமல் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது அவர்களின் உடலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்துகிறது. எனவே கவனமாக குழந்தைகளை கண்காணித்து இத்தகைய செயல்கள் நடைபெறாமல் தவிர்ப்பது சிறந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com