தமிழ்நாட்டில் கூட்டு நோய் எதிர்ப்பு சக்தி 66.2% - மூன்றாம் கட்ட ஆய்வில் தகவல்

தமிழ்நாட்டில் கூட்டு நோய் எதிர்ப்பு சக்தி 66.2% - மூன்றாம் கட்ட ஆய்வில் தகவல்
தமிழ்நாட்டில் கூட்டு நோய் எதிர்ப்பு சக்தி 66.2% - மூன்றாம் கட்ட ஆய்வில் தகவல்

தமிழ்நாட்டில் 66.2% கூட்டு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளதாக ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது. இதில் விருதுநகர் மாவட்டத்தில், நோய் எதிர்ப்புத்திறன் அதிகம் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் கூட்டு எதிர்ப்புத்திறன் எவ்வளவு உருவாகியுள்ளது என்பதைக் கண்டறிய 3ஆம் கட்டமாக ஆய்வு நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் பொது சுகாதாரத்துறையால் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, 26,610 மாதிரிகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதில் 17,624 பேருக்கு நோய் எதிர்ப்புத்திறன் உருவாகியிருப்பது தெரியவந்துள்ளது. 26,610 மாதிரிகளில் 888 திரள்களில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளும் அடங்கும்.

ஆய்வின் முடிவில் தமிழ்நாட்டில் 66.2 விழுக்காடு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருப்பது தெரியவந்திருக்கிறது. இதில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டத்தில் 84 விழுக்காடும், குறைந்தபட்சமாக ஈரோட்டில் 37 சதவீதமும் கூட்டு நோய் எதிர்ப்புத்திறன் இருப்பது கண்டறியப்பட்டது.

2020 அக்டோபர் முதல் நவம்பர் வரை நடத்தப்பட்ட முதற்கட்ட ஆய்வில் 31 விழுக்காடாக இருந்த நோய் எதிர்ப்புத்திறன், கடந்த ஏப்ரல் மாதம் நடத்திய இரண்டாம் கட்ட ஆய்வில் 29 சதவீதமாக குறைந்திருந்தது.

முதற்கட்ட ஆய்வில் 49 விழுக்காடு நோய் எதிர்ப்புத் திறன் கண்டறியப்பட்ட பெரம்பலூர் மாவட்டத்தில், இரண்டாம் கட்ட ஆய்வில் 28 சதவீதமாக குறைந்து தற்போது 58 விழுக்காடாக அதிகரித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் முதலில் 34 சதவீதமாக இருந்து 49 விழுக்காடாக அதிகரித்து தற்போது 67 சதவீதமாக மேலும் அதிகரித்திருக்கிறது.

இதேபோல் சென்னையில் 41 விழுக்காட்டிலிருந்து 49 ஆகி, தற்போது 82 சதவீதமாக அதிகரித்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் முதற்கட்ட ஆய்வில் 40 ஆக இருந்து 2ஆம் கட்டத்தில் 22 சதவீதமாக குறைந்து தற்போது 84 விழுக்காடாக அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

இரண்டாம் அலை உச்சத்தில் இருந்தபோது 97 லட்சத்து 60 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்தி முடித்திருந்த நேரத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேற்கு மாவட்டங்களான ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகியவற்றில் கூட்டு நோய் எதிர்ப்புத்திறன் 45 விழுக்காடு என்ற அளவிலேயே இருப்பதால் அங்கு கூடுதல் கவனம் தேவைப்படுகிறது என்றும் ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com