நீரிழிவு நோயாளிகளுக்கு புகைப்பழக்கம் பேராபத்து!
நீரிழிவு நோயாளிகள், குறிப்பாக டைப் 2 நோயாளிகள், புகைப்பிடித்தால் உயிரிழப்பு அபாயம் கணிசமாக உயரும் என புதிய ஆய்வு எச்சரிக்கிறது. 11.3 லட்சம் பேரின் தரவுகளை ஆய்வு செய்ததில், புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு 55% அதிக மரண அபாயம், இதய நோயுடன் சேரும் போது 36% கூடுதல் அபாயம் இருப்பது கண்டறியப்பட்டது. புகைச்சல் சிறுநீரக பாதிப்பு, இன்சுலின் எதிர்ப்பு ஆகியவற்றையும் மோசமாக்குகிறது.
நீரிழிவு நோயுள்ளவர்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கமும் இருந்தால் உயிரிழப்பு அபாயம் அதிகரிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
11.3 லட்சம் நோயாளிகளிடம் நடந்திய ஆய்வுகளை பகுப்பாய்வு செய்ததில் டைப் 2 நீரிழிவு நோயுள்ள புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு உயிரிழப்பு அபாயம் 55 சதவீதம் அதிகம் என்று தெரியவந்துள்ளது.
இதய நோயுடன் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு உயிரிழப்பு அபாயம் 36 சதவீதம் அதிகம் என்றும் தெரியவந்துள்ளது. புகைப்பிடித்தல் சிறுநீரகப் பாதிப்பு மற்றும் இன்சுலின் எதிர்ப்பை அதிகரிக்கும் அபாயத்தையும் தீவிரப்படுத்துவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

