இந்தியாவில் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுக்கும் உடற்பருமன்

இந்தியாவில் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுக்கும் உடற்பருமன்

இந்தியாவில் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுக்கும் உடற்பருமன்
Published on

உடல் பருமன் இந்தியாவில் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும், சராசரியாக பெண்களின் உடல் பருமன் 3 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இந்தியாவில் உள்ள குடும்பங்களின் சுகாதார நிலை குறித்த ஐந்தாவது கள ஆய்வின் தரவுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 4 ஆண்டுகளில் ஆண்களின் சராசரி உடல் பருமன் 19 விழுக்காடிலிருந்து 23 விழுக்காடாக உயர்ந்துள்ளது. பெண்களின் உடல் பருமன் 21 விழுக்காட்டிலிருந்து 24 விழுக்காடாக அதிகரித்துள்ளது. குழந்தைகளின் வளர்ச்சி விகிதம் 38 விழுக்காட்டிலிருந்து 36 விழுக்காடாக குறைந்திருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது நாட்டிலேயே அதிகபட்சமாக மேகாலயாவில் 47 விழுக்காடாகவும், குறைந்தபட்சமாக புதுச்சேரியில் 20 விழுக்காடாகவும் உள்ளது. மேலும், பெண்கள் கருவுறுதலும் குறைந்துள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்பு, பெண்களின் சராசரி குழந்தைகள் பிறப்பு விகிதம் 2 புள்ளி ஒன்றாக இருந்த நிலையில், தற்போது அது 2 புள்ளி பூஜ்யமாக குறைந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com