வெளவால்களில் காணப்படும் நியோகோவ் வகை கொரோனா - சீன விஞ்ஞானிகள் எச்சரிக்கை

வெளவால்களில் காணப்படும் நியோகோவ் வகை கொரோனா - சீன விஞ்ஞானிகள் எச்சரிக்கை
வெளவால்களில் காணப்படும் நியோகோவ் வகை கொரோனா - சீன விஞ்ஞானிகள் எச்சரிக்கை

வெளவால்களில் காணப்படும் நியோகோவ் என்ற புதிய வகை கொரோனா தொற்று மனிதர்களுக்கு பரவினால் மிகக் கடுமையான பாதிப்பு ஏற்படும் என சீனாவை சேர்ந்த விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

தென் ஆப்ரிக்காவில் வெளவால்கள் மத்தியில் பரவிவரும் நியோகோவ் வகை கொரோனா மெர்ஸ் சுவாச கோளாறை ஒத்து இருப்பதாக வுஹான் பல்கலைக்கழகம் மற்றும் அகடமி ஆஃப் சயின்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் பையோபிசிக்ஸ் -ஐ சேர்ந்த விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இந்த வைரஸ் உருமாறினால் மனிதர்கள் மத்தியில் பரவும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பரவினால் அந்த வைரஸ் மிக வேகமாக பரவக்கூடியதாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த வைரஸால் பாதிக்கப்படும் மூவரில் ஒருவர் உயிரிழக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

எனினும் இந்த ஆய்வை பிற ஆய்வாளர்கள் இதுவரை உறுதி செய்யவில்லை. நியோகோவ் வைரஸால் மனிதர்களுக்கு அபாயம் ஏற்படுமா என்பது குறித்து மேலும் ஆய்வுகள் தேவைப்படுவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com