புற்றுநோயில் இருந்து மீண்ட குழந்தைகளுக்கு காப்பீட்டுத் திட்டம்

புற்றுநோயில் இருந்து மீண்ட குழந்தைகளுக்கு காப்பீட்டுத் திட்டம்

புற்றுநோயில் இருந்து மீண்ட குழந்தைகளுக்கு காப்பீட்டுத் திட்டம்
Published on

புற்றுநோயிலிருந்து குணமடைந்து 5 வருடங்களான குழந்தைகள் பயன்பெறும் வகையில் உடல் மற்றும் விபத்து காப்பீட்டுத் திட்டத்தை ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அதிலிருந்து குணமடைந்தவர்கள் காப்பீட்டு நிறுவனங்களின் மூலம் மருத்துவக் காப்பீடு பெறமுடியாத நிலை இருந்தது. இந்நிலையில் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம், புற்றுநோயில் இருந்து மீண்டவர்கள் பயன்பெறும் வகையில் ’செயிண்ட் ஜூஸ் பார் லைஃப்’ என்கிற காப்பீட்டுத் திட்டத்தை தொடங்கி உள்ளது. நவம்பர் 4 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில், இந்த ஆண்டில் மட்டும் 596 குழந்தைகளுக்கு காப்பீடு வழங்கப்படும் என காப்பீட்டு நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com