திருச்சி: ரத்த நாள அடைப்பை நீக்க கண்டுபிடிக்கப்பட்ட முதல் ஊசியை செலுத்திக்கொண்ட நோயாளி

திருச்சி: ரத்த நாள அடைப்பை நீக்க கண்டுபிடிக்கப்பட்ட முதல் ஊசியை செலுத்திக்கொண்ட நோயாளி
திருச்சி: ரத்த நாள அடைப்பை நீக்க கண்டுபிடிக்கப்பட்ட முதல் ஊசியை செலுத்திக்கொண்ட நோயாளி

சர்க்கரை நோயாளிகளின் உடலில் ஏற்படும் ரத்த நாள அடைப்பை நீக்க, உலகிலேயே முதல்முறையாக  திருச்சியில் நோயாளிக்கு ஊசி போடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, எலும்பு முறிவு சிகிச்சை சிறப்பு மருத்துவர் ரவி பேட்டியளித்துள்ளார்.

"மங்களூரு மணிபால் பல்கலைக்கழக மருத்துவர்கள் மற்றும் சிப்லா (Cipla) மருந்து கம்பெனி இணைந்து, கடந்த 10 ஆண்டு கால ஆராய்ச்சிக்குப் பிறகு உலகின் பல நாடுகளில் ஆராய்ச்சி மூலம் உருவாக்கிய அந்த நவீன ஸ்டெம்செல் சிகிச்சை, இந்தியாவில் அரசு அங்கீகரித்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம், புகைபிடிப்போர் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு கால்களின் ரத்த ஓட்டம் பாதித்து amputation (காலை வெட்டி எடுக்க) அவசியம் இன்றி புதிய ரத்த நாளங்களை உருவாக்கி (Angiogenesis) காப்பாற்ற முடியும். இது இளவயதினரின் எலும்பு மஜ்ஜையிலிருந்து எடுத்து பலமடங்கு வளர்த்து ஒரு குப்பியில் 150 & 200 மில்லியன் செல்களாக 2 வித doses ஆக விற்கப்படுகிறது. நோயாளியின் உடல் எடை பொறுத்து மாறுபடும்.

இது (vaccine) தடுப்பூசி போல ஐஸ் பெட்டியில் வைத்து அனுப்பப்படும். நோயாளிக்கு ஊசி போடும் முன் room temperatureக்கு கொண்டு வர வேண்டும். அடைபட்ட ரத்த நாளங்களில் byepass , stent போட முடியாத நோயாளிகளுக்கு காலை அகற்றாமல் காப்பாற்ற கூடியது என்று ஆராய்ச்சி முடிவுகள் அடிப்படையில் இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதே போல மூட்டு தேய்ந்தவர்களுக்கு stemcell சிகிச்சைக்கு அங்கீகாரம் பெற அரசுக்கு விண்ணப்பித்துள்ளது.

இதனால் மரபணு மாற்றம் stemcell சிகிச்சையில் இந்தியா முன்னணியில் உள்ளது. இந்த சிகிச்சை இந்தியாவிலும், உலகிலேயும் முதல் முறையாக திருச்சி (மாருதி) தனியார் மருத்துவமனையில் நீரிழிவு நோயாளிக்கு அளிக்கப் பட உள்ளது என எலும்பு முறிவு சிறப்பு மருத்துவர் ரவி தெரிவித்தார்.

இந்த ஊசியின் விலை இரண்டு லட்ச ரூபாய் மற்றும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com