ஜங்க் புட், பிரியாணி அதிகமாக சாப்பிடலாமா?-உணவுமுறை குறித்து மருத்துவரின் A-Z விளக்கங்கள்

ஜங்க் புட், பிரியாணி அதிகமாக சாப்பிடலாமா?-உணவுமுறை குறித்து மருத்துவரின் A-Z விளக்கங்கள்
ஜங்க் புட், பிரியாணி அதிகமாக சாப்பிடலாமா?-உணவுமுறை குறித்து மருத்துவரின் A-Z விளக்கங்கள்

நமது பாட்டி தாத்தா சாப்பிட்டது போன்று சத்தான உணவு வகைகளை நம் பெற்றோர்கள் சாப்பிட்டது இல்ல. அதேபோல் நம் பெற்றோர்கள் சாப்பிட்ட சத்தான உணவுகளை நாம் சாப்பிடுவது இல்லை. இன்றைய நாட்களில் நேரம் தவறாமல் சாப்பிடுவது என்பது இயலாத ஒன்றாக மாறிவிட்டது. இதனால் நாம் எந்த வகையான பிரச்சனைகளை எதிர்கொள்கிறோம் என்பதை பற்றி மருத்துவர் திலீபனிடம் கேட்டோம். அவர் நம்முடன் பகிர்ந்துக்கொண்டது இங்கே..

சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது நல்லதா அல்லது சாப்பிடும் முன் குடிப்பது நல்லதா? ஒரு நாளில் எத்தனை லிட்டர் தண்ணீர் எடுத்துக்கொள்வது உடலுக்கு நல்லது?

இப்படிதான் தண்ணீர் குடிக்கவேண்டும், இவ்வளவு தான் தண்ணீர் குடிக்கவேண்டும் என்று எதுவும் இல்லை. எடை குறைக்கவேண்டும் என நினைப்பவர்கள் சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிக்கலாம். அப்பொழுது நாம் எடுத்துக்கொள்ளும் உணவின் அளவு குறையும். அதனால், உடல் எடை குறைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பதால், வயிறு உப்பிசம் அடைவதுடன், செரிமானத்திற்கான நேரம் அதிகரிக்கும். குறந்தது நாள் ஒன்றுக்கு, 2லிருந்து3 லிட்டர் தண்ணீர் குடித்தால் நலம்.

சாப்பிட்ட பிறகு சுடு தண்ணீர் குடிக்கலாமா? அதனால் செரிமானம் சுலபமாகுமா?

அப்படி ஏதும் இல்லை. நாம் சாப்பிடும் உணவை செரிமானம் செய்வது வயிற்றுப்பகுதியில் சுரக்கும் அமிலம் தான். ஆகவே நாம் அருந்தும் தண்ணீருக்கும் செரிமானத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதே சமயம், சுடு தண்ணீர் அருந்துவது உடலுக்கு நல்லது.

சாப்பிட்ட பிறகு desserts எடுத்துக்கொள்வது நல்லதா? அல்லது காபி சாப்பிடுவது நல்லதா?

காபி சாப்பிடுவதால் அதிக அளவு பசியை தூண்டும் ஆகவே சாப்பிட்ட பிறகு காபி குடிப்பது என்பது அவசியம் இல்லை. ஒருவர் அடிக்கடி காபி சாப்பிட்டு வந்தால், அஸிடிட்டி போன்ற உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதே சமயம் சாப்பிட்டு முடித்த பிறகு ஒரு sweet சாப்பிடலாம். அதில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளதால், அது செரிமானத்தை அதிகரிக்க உதவி செய்யும்.

இப்பொழுது அதிகம் பேர் பிரியாணி சாப்பிடுவதை விரும்புகின்றனர். இது உடலுக்கு நன்மையா தீமையா?

முன்பெல்லாம் ஒரு விழா அல்லது முக்கியமான நாட்களில் மட்டும் தான் பிரியாணி சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். ஆனால் இப்போழுது அது தினம் சாப்பிடும் ஒரு உணவாக மாறிவிட்டது. இதில் கலோரி அதிகம். கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், சுகரின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. அடுத்து அதில் ஆயிலின் அளவு அதிகம். ஆகவே கொழுப்பு அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால், ஹார்ட் அட்டாக் வரவும் வாய்ப்புள்ளது. மேலும் செரிமான குறைபாடும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதில் உள்ள மசாலாக்கள் வயிற்று உபாதைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதில் நார் சத்து குறைவாக இருப்பதால் ( constipation) மலச்சிக்கல் வருவதற்கும் வாய்ப்பு அதிகம்.

எத்தனை நாட்களுக்கு ஒரு முறை பிரியாணி சாப்பிடலாம்?

எத்தனை நாட்களுக்கு என்று ஏதும் இல்லை. தினமும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் சாப்பிடும் அளவு குறைவாக இருக்கவேண்டும்.

சைவ உணவு சாப்பிடுபவர்களை விட அசைவ உணவு சாப்பிடுபவர்கள் மிகவும் வலிமையாக இருப்பார்கள் என்பது உண்மையா?

உண்மைதான். ஆனால், சைவ உணவில் பலவித சத்துகள் அதிகம் வயிற்றுக்கு மிக நல்லது. ஆனால். அசைவ உணவில் ப்ரோட்டின் அதிகம் நார் சத்து குறைவாக இருக்கும். அதனால் மலசிக்கல் வரலாம். மேலும், ஆசிட் அதிகமாக இருப்பதால், கிட்னி சம்பந்தப்பட்ட நோய் வரலாம்.

பழங்கள் காய்கறிகள் இதை உணவில் குறைவாக உட்கொள்வதால் ஏற்படும் உபாதைகள் என்னென்ன?

பழங்களில் நார் சத்து அதிகமாக இருப்பதால், மலச்சிக்கல் வராமல் உடலை பாதுகாக்கிறது. அதை மிககுறைவாக எடுத்துக்கொள்வதால், உடலில் பைல்ஸ் மேலும் ஃபிஷர்ஸ் வர வாய்புகள் அதிகம். ஆகவே உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இப்பொழுது ஜங்க் புட் அதிகமாக எடுத்துக்கொள்கிறார்கள். இதன் பின் விளைவுகள் என்னென்ன?

இதில், அதிகளவு உடலுக்கு கெடுதி அளிக்கக்கூடிய பாமாயில் மற்றும் வெஜிடெபிள் ஆயில் போன்றவற்றை உபயோகப்படுத்துவதால், அது உடலுக்கு மிகவும் கெடுதலை அளிக்கிறது. ஆகவே நாம் உபயோகிக்கும் எண்ணெயிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். செக்கில் வாங்கும் கடலை எண்ணெய், நல்லெண்ணெய், கடுகு எண்ணெய், ஆலிவ் ஆயில் போன்றவை உடலுக்கு மிகவும் நல்லது. இத்தகைய எண்ணெய் வாங்கி நாம் உபயோகித்தால் நல்லது. ஆனால், எல்லோருக்கும் அதை வாங்கி உபயோகப்படுத்த முடியாது. ஆகவே... கூடிய வரையில் வெளியில் ஆயில் வகைகளை வாங்கி சாப்பிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். ஜங்க் ஃபுட்டில் சால்ட் அதிகமாக இருப்பதால் BP அதிகரிக்கும் அதுவும் உடலுக்கு நல்லது இல்லை..

உணவில் அதிகப்படியான உப்பு சேர்த்துக்கொள்வதால் ஏற்படும் தீங்கு என்னென்ன?

உப்பு அதிகப்படியாக உணவில் சேர்த்துக்கொள்வதால் பிரஷர் அதிகரிக்கும். அதனால், சிறுநீரக செயலிழப்பு, ஏற்படும். வயது கூடக்கூட, உணவில் உப்பின் அளவை குறைத்தல் வேண்டும்.

நேரம் தவறி சாப்பிடுவதால் உடலில் எந்த வகையான தீங்கு ஏற்படும்?

முதலில் வாயு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும். உடலில் ஆசிட் சுரப்பு அதிகமாகும். நீண்ட நேரம் பட்னி கிடந்து சாப்பிடுவதால் அதிக அளவு உணவு எடுத்துக்கொள்வோம். ஆகயால் செரிமான சம்பந்த பிரச்சனைகள் அதிகரிக்கும்.

சாப்பிடுவதற்கான சரியான நேரம் என்ன?

ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கு ஒருமுறை உணவு எடுத்துக்கொள்வது நல்லது. காலை உணவு, மத்திய உணவு இடைப்பட்ட நேரத்தில் பழச்சாறு, பிஸ்கட் இது போல் ஏதாவது சாப்பிடலாம் அதே போல், மத்திய உணவு சாப்பிட்டு இரண்டு மணிநேரம் கழித்து, சுண்டல்,பயறு, பழங்கள் போன்றவை எடுத்துக்கொள்ளலாம்.

ஃபாஸ்ட் ஃபுட் (fast food )உடலுக்கு நல்லதா?

முன்பே சமையல் செய்து வைத்து சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல. சமைத்து சில மணிக்குள் சாப்பிடுவது மிக நல்லது. சமைத்து நீண்ட நேரம் கழித்து சாப்பிட்டால், அதில் பாக்டீரியாகள் வளர வாய்ப்புள்ளது.அது உடல் நலத்துக்கு தீங்கு ஏற்படுத்தும்.

பிளாஸ்டிக் பைகளில் , கப்புகளில் வாங்கப்படும் தேநீர் உடலுக்கு நல்லதா?

மைக்ரோ பிளாஸ்டிக்கில் உபயோகப்படுத்தப்படும் தேநீர் தொடர்ந்து சாப்பிட்டு வருவதால், உடலில் உள்ள ஆர்கான்ஸ் சேதப்படுத்தும் அபாயம் உள்ளது. ஆகையால் பிளாஸ்டிக் பைகளில், கோப்பைகளில் உணவு எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும். கண்ணாடி பாட்டில்கள் பெஸ்ட். கூடிய வரையில் கண்ணாடி பாட்டில்களில் காபி, தேநீர் அருந்துவது நலம்.

தேநீர், மற்றும் காபி, ஒருநாள் எத்தனை முறை சாப்பிடலாம்?

3 முறை சாப்பிடலாம். அதே போல் இதய நோயாளிகள் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் அடிக்கடி காபி மற்றும் தேநீர் எடுத்துக்கொள்வதை தவிர்கக வேண்டும். அதே போல், சூடாக காபி, தேநீர் அருந்துபவர்களுக்கு அசிடிட்டி வர வாய்ப்புள்ளது. இரவு நேரங்களில் green tea சாப்பிடலாம். காபி சாப்பிடும் போது சிலருக்கு தூக்கம் வராது. ஆகவே இதை தவிர்கலாம்.

இரவு நீண்ட நேரம் கழித்து சாப்பிடுவர்களுக்கு சத்தான உணவாக எதை பரிந்துரைப்பீர்கள்?

நம் நாட்டு உணவு முறை எப்பவும் சிறந்தது. கார்போஹைட்ரேட்டை குறைத்து தானியங்கள் அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.

சுற்றுபுற சூழலாலும் நமக்கு உடல் நல பாதிப்பு ஏற்படலாம். ஆகவே இதை தவிர்க ஏதாவது யோசனை சொல்லுங்க..

பிளாஸ்டிக் போன்றவைகளில் பேக் செய்து தருவதை தவிர்த்து வாழ இலை , பூவரசு இலைகளில் உணவை பேக் செய்து தரலாம். காபி, தேநீரை கண்ணாடி கோப்பை மற்றும் மண் கோப்பைகளில் தரலாம். நாம் வெளியில் செல்லும் பொழுது, இது போன்றவற்றை அருந்துவதற்கு கப் முதலியவற்றை எடுத்துச்செல்லலாம். அப்பொழுது பிளாஸ்டிக்கின் உபயோகம் குறையும்.

இரவு நேரங்களில் வேலை செய்பவர்கள் எந்த மாதிரி உணவை எடுத்துக்கொள்ளலாம்?

அந்த மாதிரி மனிதர்களுக்கு உணவு பழக்கவழக்கத்தில் பெரும் வேறுபாடு காணமுடியும். இத்தகயவர்கள் அடிக்கடி தண்ணீர் அருந்தவேண்டும், ஜூஸ் போன்ற திரவ உணவை அவர்கள் அடிக்கடி சாப்பிடவேண்டும்.

மேலும், இதை பற்றி விரிவாக தெரிந்துக்கொள்ள இந்த வீடியோ தொகுப்பை காணவும்..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com