ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து முதல்வர், மா.சுப்ரமணியன் மாறுபட்ட கருத்து: ஓபிஎஸ் கேள்வி

ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து முதல்வர், மா.சுப்ரமணியன் மாறுபட்ட கருத்து: ஓபிஎஸ் கேள்வி
ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து முதல்வர், மா.சுப்ரமணியன் மாறுபட்ட கருத்து: ஓபிஎஸ் கேள்வி

ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்து உண்மையா அல்லது சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்த தகவல் உண்மையா என விளக்க வேண்டும்  என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கரோனோ தொற்று தீவிரமாக இருந்தபோது ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்திருப்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது.

ஆனால், தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிற திமுக அரசோ, ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் ஒரு தமிழகத்தில் உயிரிழப்பு இல்லை என்று தெரிவித்து இருக்கிறது. அதனை தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். ஒரு செய்தியை பத்திரிகையாளர்களிடம் தெரிவிக்கின்ற உரிமை அமைச்சருக்கு உண்டு அதை நான் மறுக்கவில்லை ஆனால் அந்த செய்தியில் உண்மை இருக்கிறதா என்பதை ஆராய வேண்டிய கடமை எதிர்க்கட்சிக்கு உண்டு.

சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை அடுத்து மே 7 அன்று ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற அன்றைய தினமே இந்திய பிரதமருக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து ஒரு கடிதத்தை ஸ்டாலின் எழுதினார்.

அந்த கடிதத்தில் தமிழ்நாடு ஆக்சிஜன் நெருக்கடியில் சிக்கி தவிப்பதாகவும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இரண்டு நாட்களுக்கு முன்பு செங்கல்பட்டில் 13 பேர் எதிர்ப்பாராத விதமாக இறந்து இருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். தமிழக முதல்வர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதையும் குடும்ப நலத்துறை அமைச்சர் பேட்டியையும் ஒப்பிட்டுப் பார்த்தால் முரண்பாடு தெள்ளத் தெளிவாகிறது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்திய பிரதமருக்கு கடிதம் வாயிலாக தெரிவித்த கருத்து உண்மையா? அல்லது மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் பேட்டி மூலம் தெரிவித்தாரே அந்தத் தகவல் உண்மையா என்பதை விளக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உண்டு. முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்து உடனடியாக ஆராய்ந்து உண்மை நிலையை தமிழ்நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com