பதின்ம வயதில் பருவமடைந்த நாளிலிருந்து பெண்களுக்கு மாதந்தோறும் மாதவிடாய் சுழற்சி இருக்கும். இந்த சுழற்சி 40 - 50 வயதில் நின்றுவிடும். அதாவது தொடர்ந்து 12 மாதவிடாய் சுழற்சி நிகழாமல் போகும்போது ஒரு பெண் மெனோபாஸ் நிலையை அடைந்துவிட்டார் என்று அர்த்தம். இருப்பினும் வயது, இனம், மரபியல் மற்றும் மருத்துவ நிலைமைகளை பொருத்து ஒவ்வொருவருக்கும் மெனோபாஸ் நிலையை அடைவது என்பது மாறுபடும். கருப்பையானது கருமுட்டை உற்பத்தியை நிறுத்தி, பெண்களின் பாலியல் ஹார்மோன்களின் சுரப்பு குறையும் நிலையைத்தான் மெனோபாஸ் நிலை என்கின்றனர்.
உடல் மற்றும் மனரீதியான பல்வேறு மாற்றங்களுடன் மெனோபாஸ் தொடர்புடையது. குறிப்பாக ஒரு பெண்ணின் உடல், சமூக மற்றும் உணர்வுகள் நலனுடன் தொடர்புடையது. ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் சுழற்சி முற்றிலுமாக நின்று மெனோபாஸ் நிலையை அடைவதற்கு சில வருடங்களுக்கு முன்பே அவர்களிடம் சில அறிகுறிகள் தெரியும். இந்த அறிகுறிகள் மெனோபாஸ் நிலையை எட்டும்வரையிலோ அல்லது சிலருக்கு வாழ்நாள் முழுதும்கூட இருக்கலாம்.
மெனோபாஸ் அறிகுறிகள்
மெனோபாஸ் அறிகுறிகள் ஈஸ்ட்ரோஜன் உற்பத்தி குறைப்பு மற்றும் ஹார்மோன் ஏற்ற இறக்கங்களைக் குறிக்கிறது. மாதவிடாய் வெளிப்படாமை, நாட்கள் தள்ளிப்போதல் அல்லது முன்கூட்டியே வெளிப்படுதல் போன்று சுழற்சியில் மாற்றம், ரத்தப் போக்கு வெளிப்படுதலின் அளவு குறைதல் அல்லது அதிகரித்தல் போன்ற பொதுவான அறிகுறிகள் தென்படலாம்.
சிலருக்கு கீழ்க்கண்ட அறிகுறிகளும் தென்படலாம்
இதயத்துடிப்பும் அதிகரிப்பு, சிறுநீர் பிரச்னைகள் போன்றவை மெனோபாஸ் நிலையால்தான் ஏற்படுகிறதா அல்லது வேறு ஏதேனும் பிரச்னைகளின் அறிகுறிகளா என்பதை பரிசோதித்து அறிந்துகொள்வது நல்லது.
எப்போது மருத்துவ சிகிச்சை தேவைப்படும்?
மெனோபாஸ் நிலை என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்நாளிலும் இயற்கையாக நிகழ்வது. அதனை தவிர்க்கமுடியாது. ஆனால் அதன் அறிகுறிகள் மற்றும் நிலைகள் மோசமானதாக இருக்கும்பட்சத்தில் மருத்துவரை அணுகலாம். சில நேரங்களில் அறிகுறிகளின் தீவிரத்தை குறைக்க ரத்த பரிசோதனைகள், பாப் ஸ்மியர், அல்ட்ராசவுண்ட் அல்லது மேமோகிராபி போன்ற பரிசோதனைகளை மேற்கொள்வர். கீழ்க்கண்ட சில ப்ரீ மெனோபாஸ் நிலை அல்லது மெனோபாஸ் நிலைக்கு பிறகு சில அறிகுறிகளுக்கு உடனடியாக மருத்துவ ஆலோசனை தேவை.
இதுபோன்ற அறிகுறிகளை கண்டுகொள்ளாமல் விடக்கூடாது. உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது சிறந்தது.