\
வானிலை
வானிலைபுதியதலைமுறை

தெற்கு டெல்டா பகுதிகளில் கனமழை: அடுத்த 2 மணி நேரம் தீவிரம் காட்டும்...

டெல்டா வெதர்மேன் ஹேமசந்திரன் கொடுத்த இன்றைய வானிலை அறிக்கை...
Published on

டெல்டா பகுதிகளில் ஒரு பகுதியிலிருந்து ஈரப்பதமிகுந்த கீழைக்காற்று, மற்றொரு பகுதியிலிருந்து வறண்ட வடக்கு காற்று என இருவேறு காற்று குவிந்து வருவதால் தெற்கு டெல்டா பகுதிகளில் காலை முதல் மழை தீவிரமடைந்துள்ளது.

குறிப்பாக காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு பரவலாக பலத்த மழை பதிவாகும்.

 தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்திரன்
தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்திரன் முகநூல்

தெற்கு டெல்டா பகுதிகளான திருப்பூண்டி, தலைஞாயிறு, திருக்குவளை,வேதாரண்யம்,கோடியக்கரை, திருத்துறைப்பூண்டி மன்னார்குடி போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் மிககனமழை பதிவாகும். தஞ்சாவூர் மயிலாடுதுறை மாவட்டங்களிலும் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது.

மழையின் தீவிரமானது அடுத்த 2 மணி நேரங்களுக்கு சற்று பலத்துக் காணப்படும்.

அதே சமயம்,டெல்டா மாவட்டங்களில் பெய்துக்கொண்டிருக்கும் இந்த மழையானது பிற்பகல் 3 மணிக்கு பின்பு மழையின் தாக்கம் படிப்படியாக குறையும்.

மழை
மழைpt web

தன் தமிழகத்தில் புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் விட்டு விட்டு மழை தொடரும் என்றும் சில இடங்களில் கனமழையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com