இந்தியாவில் 22 மாவட்டங்களில் கொரோனா பரவல் குறையவில்லை என்றும், அதில் 7 மாவட்டங்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவை என்றும் மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலர் கூறியுள்ளார். அந்த 7 மாவட்டங்கள் ஆலப்புழா, கோட்டயம், மலப்புரம், திருச்சூர், வயநாடு, எர்ணாகுளம், பத்தனம்திட்டா ஆகியவை ஆகும். குறிப்பாக கோட்டயம், எர்ணாகுளம், திரிச்சூர் மற்றும் மலப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 45 சதவீதம் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.