வருத்தம் தெரிவித்தால் மன்னித்து அனுப்புவதற்கு சட்டத்தில் இடமுண்டா?

வருத்தம் தெரிவித்தால் மன்னித்து அனுப்புவதற்கு சட்டத்தில் இடமுண்டா?

வருத்தம் தெரிவித்தால் மன்னித்து அனுப்புவதற்கு சட்டத்தில் இடமுண்டா?
Published on

சட்டப்படி தவறான செயல்களுக்கு வருத்தம் தெரிவித்தால் மன்னித்து அனுப்புவதற்கு சட்டத்தில் இடமுண்டா? என்பது குறித்து சட்ட நிபுணர்கள் சிலரிடம் கேட்டோம். 

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கணேஷ்பாபு கூறுகையில், ''Contempt, legislative privilege motions (உரிமை மீறல்), defamation போன்ற விடயங்களில் நடைமுறையில் (interms of procedure) மன்னித்து அனுப்புவதற்கான இடமுண்டு. மற்றபடி சட்டத்திலேயே by law "வருந்தினால் மன்னித்து அனுப்பலாம்" என்று இருப்பதற்கான வாய்ப்பு குறைவு.

ஆனால் பல குற்ற வழக்குளில் பாதிக்கப்பட்டவர் புகார் அளித்தாலோ அல்லது தொடங்கிய வழக்கை தொடர்ந்தாலோதான் வழக்கு தண்டனை நோக்கி நகரும்‘’ என்கிறார் அவர்.

வழக்கறிஞர் ஹன்சா கூறும்போது, ‘’பொதுவாக கண்டம்ட் ஆப் கோர்டுக்கு மன்னிப்பு வழங்கலாம். சிவில் வழக்குகள் சிலவற்றிற்கும் கூட. வேறு சிறு தண்டனைகள் வழங்கலாம். உதாரணமாக 10 மரக்கன்றுகள் நட வேண்டும் என்பது போல.

அது போக கிரிமினல் செயலால் பாதிக்கப்பட்டவருக்கு, குற்றவாளி ஈடு தர வேண்டும் என்றும் கூட சொல்லலாம்.  டிஸ்க்ரீசனிரி அச்ப் கோர்ட் சில இடங்களில் அனுமதிக்கப்படும்’’ என்கிறார் அவர்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com